Posts

Showing posts from June, 2018

போச்சு. போச்சு.! இனிமே இந்தியர்களால் கனவில் கூட ஐபோன் வாங்க முடியாது.! போச்சு. போச்சு.! இனிமே இந்தியர்களால் கனவில் கூட ஐபோன் வாங்க முடியாது.!

Image
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் ஐபோன்களின் விலை நிர்ணயத்தை அதிகரித்துள்ளது. மொபைல் போன்களின் சுங்க வரியை 15% முதல் 20% வரை உயர்த்துவதாக மோடி அரசாங்கம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து ஐபோன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதத்தில் ஐபோன்கள் இதேபோன்றதொரு விலை உயர்வை சந்தித்தது. அந்த அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்கு பின்னர் விலை அதிகரிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த சமீபத்திய விலை உயர்வில் சிக்காத ஒரே ஆப்பிள் கருவி - ஐபோன் எஸ்இ மட்டுமே, ஏனெனில் அது இந்தியாவில் தயாரிப்பு ஆலைகளை கொண்டுள்ளது. இந்த விலையேற்றத்தில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் ஆகிய கருவிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்த எல்லா கருவிகளிலும் கிட்டத்தட்ட 3% அளவிலாக விலை நிர்ணயம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்டுள்ள ஐபோன் மாடல்களின் புதிய விலைகள் இன்று முதல் சந்தையில் தொடங்கும். அதாவது, பிப்ரவரி 5, 2018 முதல் தொடங்கும்.  ஆப்பிள் நிறுவனமும் இந்த விலையேற்றத்தை உறுதி செய்தது மட்டுமின்றி அதன் விற்பனையாளர்களுக்கும் இதை அறிவித்துள்ளது.

ஜூலை 5 புதிய சேவையை அறிமுகம் செய்யும் முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கும் ஏர்டெல்..!

Image
2016 செப்டம்பர் மாதம் ஜியோ நிறுவனத்தை அறிமுகம் செய்து இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய விலை போர்-ஐ உருவாக்கிய முகேஷ் அம்பானி தற்போது ஹோம் பிராட்பேண்ட் சந்தையிலும் களமிறங்க உள்ளதால் புதிய போட்டிஉருவாகியுள்ளது. ஏர்டெல் ஏற்கனவே ஜியோவின் மலிவான மொபைல் சேவையுடன் போட்டி போட்டு வரும் நிலையில், ஜியோ ஹோம்பிராட்பேண்ட் சேவை ஏர்டெல் நிறுவனத்தைக் கலங்க வைத்துள்ளது. அப்படி ஜியோ என்ன சேவை அளிக்கப்போகிறது, இதன் கட்டணங்கள் என்ன..? ஜூலை 5 ஜியோவின் மொபைல் சேவை அறிமுகம் செய்யப்பட்ட காலம் முதலே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் fibre-to-the-home சேவையைச் சோதனை செய்யத் துவங்கியது. இதன் படிப்படியான சோதனைகள் முடிந்த உடன் தற்போது ஜூலை 5ஆம்தேதி நடைமுறைக்கு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. வேகம் ஹோம் பிராட்பேண்ட் சேவை தற்போது பெரு நகரங்களைத் தாண்டி 2ஆம் தர நகரங்களிலும் அதிகளவில்பயன்படுத்துப்பட்டு வருகிறது.   இதைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் ஸ்மார்ட் டிவி, ஆளுக்கு ஒரு ஸ்மார்ட் போன் எனஇண்டர்நெட் சார்ந்த தொழில்நுட்ப சாதனங்கள் அதிகளவில் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதனைக் கருத்தில் கொண்ட ஜியோ தனது ஹோம் பிராட்பேண்ட் சேவையில

PHP vs Python : Which one is the Best Server-Side Programming?

PHP vs Python, the two most popular back-end programming languages. Python has the variety of dynamic features with simple script whereas PHP is specifically used for server-side by most of the developers. But, What is the best choice? Are both good at server-side programming? A lot of doubts hit your brain when you try to learn the server-side programming. I wish this article will clear the indecision. PHP vs Python – Which one to choose? Python and PHP are two modern high-level languages, which are favorites among many developers. While comparing both the languages we need to consider its origin, the purpose of their existence, features, functionalities and so forth. PHP vs Python: Origins and purpose of their existence Python  is older than PHP. It was created five years before the existence of Preprocessor-Hypertext. The language is created and developed by Guido Van Rossum in 1989. From the year 2000, its popularity among the developers rapidly grown due to its Uni

Best Programming Languages Available for Web Development

The world of the internet is filled with a clutter of websites that are developed with the help of different programming languages, offering different benefits and drawbacks. With the availability of a plethora of programming languages for the purpose of development of a website, you must choose the one that suits the best to your needs of a website. Before making a choice of the best language, you need to have a basic understanding of all the available web development programming languages used to develop different websites available on the web. PHP This language can be referred to as the king of the web development world in the category of server side languages. Websites developed with PHP Development India have covered around 75% of all the servers hosting different websites. Many well-known websites are known to have been programmed with this language, like the Wikipedia, WordPress and a part of the Facebook that users are able to see. Being a server-side language, the code

“இதுவரைக்கும் எந்த ஹஸ்பெண்ட் இப்படி செஞ்சுருக்காங்க?” - பாலாஜியைக் குறைகூறும் நித்யா

Image
இதுவரைக்கும் எந்த ஹஸ்பெண்ட் இப்படி செஞ்சுருக்காங்க?’ என்று பாலாஜியைப் பற்றி நித்யா குறை கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில், பாலாஜி மற்றும் நித்யாவை வைத்து பிரச்சினை தொடங்கியுள்ளது. கணவன் - மனைவியான இருவரும், கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நித்யாவை பாலாஜி கொலைசெய்ய முயற்சிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களி வைரலானதை நாம் அறிவோம். இந்நிலையில், இருவரையும் ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் அனுப்பி, அவர்களுக்குள் ஏற்படும் சண்டை மூலம் டிஆர்பியை எகிறவைக்க நினைத்துள்ளது விஜய் டிவி. அதன்படி, முதல் வாரத்திலேயே அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஆரம்பித்தது போன்ற புரமோஷன் வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறது. ஒரு வெங்காயத்தால் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது போல் நேற்றைய புரமோ வீடியோ ஒளிபரப்பானது. ஆனால், நிகழ்ச்சியில் அதுபோன்று எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமாகத்தான் அந்தக் கேள்வியைக் கேட்கிறார் பாலாஜி. இந்நிலையில், இன்றும் அதுபோன்றதொரு புரமோ வீடியோவை ஒளிபரப்பி இருக்கிறது விஜய் டிவி. சற்று முன்பு வெளியான புரமோ வீடியோ

புரமோவைக் காட்டி ஏமாற்றும் ‘பிக் பாஸ் 2’

Image
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ் 2’. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். கடந்த சீஸனைப் போலவே இந்த சீஸனிலும் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, 16 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கடந்த 17-ம் தேதியன்று பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பொன்னம்பலம், மும்தாஜ், அனந்த் வைத்யநாதன், ஜனனி, சென்றாயன், பாலாஜி மற்றும் அவர் மனைவி நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியிலும், அதன் சமூக வலைதளங்களிலும் தினமும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சிக்கான முன்னோட்டமாக, அன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து சில புரமோக்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம் ஆனால், அந்த புரமோக்களில் காட்டப்பட்டதைப் போல் நிகழ்ச்சியில் எதுவுமே நடப்பதில்லை. இதனால், ‘பிக் பாஸ் 2’ ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. உதாரணத்திற்கு, நேற்று வெளியான புரமோ வீடியோவில், சமைத்து கொண்டிருந்த மனைவி நித்யாவிடம், “பொரியல்ல ஒரு வெங்காயம் போடணும்ல?” என்று கடுமையான தொனியில் பாலாஜி திரும்பத் திரும்பக் கேட்பது போன்றும், அதற்கு மும்தாஜ் ச

’பிக் பாஸ் 2’ - நாள் மூன்று: வெங்காயப் பஞ்சாயத்து

Image
2 நாட்களாக சப்பென்று சென்று கொண்டிருந்த ’பிக் பாஸ் 2’ நேற்றுதான் சற்று சூடு பிடிக்கத் தொடங்கியது என்று கூறலாம். ஒரு வெங்காயத்துக்கு இவ்ளோ பெரிய பஞ்சாயத்தா என்று எண்ணுமளவுக்கு காய்ச்சி விட்டார்கள் மும்தாஜும் நித்யாவும். காலையில் ’சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும் மமதி, பாலாஜி உள்ளிட்ட சிலர் உட்கார்ந்தபடியே தூங்கி வழிய மற்றவர்கள் எழுந்து குத்தாட்டம் போடத் தொடங்கி விட்டனர் பொன்னம்பலம் உட்பட. பாடல் முடிந்ததும் ’நள்ளிரவில் மெயின் கதவு பூட்டப்பட்டு விட்டதால்’ தான் ஒன் பாத்ரூம் போக சிரமப்பட்டு குப்பைக்கூடையைத் தூக்கிக்கொண்டு ஓடியதையும் கலகலப்பாக சொல்லி முடித்தார் பொன்னம்பலம். ஆட்டத்திலும், கேமராவைப் பார்த்து பேசுவதிலும், கேமராவைக் காதலிப்பதாகச் சொல்வதிலும் ஓவியாவை நகலெடுக்க முயற்சித்தார் ஐஸ்வர்யா. ஃபீலா பீலா என்பதுதான் நேற்றைய லக்ஸரி பட்ஜெட் டாஸ்க். அதாவது வீட்டில் இருப்பவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழு கதை சொல்ல வேண்டும். இன்னொரு குழு அந்தக் கதை உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் டாஸ்க். இதைச் செய்து முடித்தா

“இன்னைக்கு இந்த வீட்ல என்னவோ நடக்கப் போகுது” - ஆரூடம் சொல்லும் டேனியல்

Image
‘இன்னைக்கு இந்த வீட்ல என்னவோ நடக்கப் போகுது’ என ஆரூடம் சொல்கிறார் டேனியல். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 நாட்களாக ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், 16 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில், ஜனனி, யாஷிகாவுக்கு இளைஞர்கள் அதற்குள் ஆர்மி ஆரம்பித்துவிட்டனர். மும்தாஜை புரமோஷன் வீடியோக்களில் மிகவும் கோபக்காரராகக் காட்டுகின்றனர். ஆனால், நிகழ்ச்சியைப் பார்த்தால் அவர் நியாயமாகவே நடந்து கொள்கிறார். கடந்த நான்கு நாட்களாக டாஸ்க் எதுவும் இல்லாமல் சுமுகமாகச் சென்று கொண்டிருந்த ‘பிக் பாஸ் 2’ வீட்டில், தற்போது டாஸ்க் ஆரம்பித்துவிட்டது. மும்தாஜ் குழந்தை போல பால் டப்பா மூடியில் இருக்கும் ரப்பரை சப்பியபடியும், அனந்த் வைத்யநாதன் மற்றும் ஷாரிக் இருவரின் கைகளும் ஒரே கயிறில் பிணைக்கப்பட்டும் இருக்கின்றனர். சென்றாயன், யாஷிகா தலையில் வைஷ்ணவி முட்டை உடைக்க, பொன்னம்பலம் மற்றும் நித்யாவை நீச்சல் குளத்துக்குள் பிடித்து தள்ளி விடுகின்றனர். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா தத்தாவுக்கு ஜனனி முத்தம் கொடுக்க, சமைத்துக் கொண்டிருக்கும் மனைவி ந

மீண்டும் மும்தாஜிடம் சண்டை போடும் நித்யா: இதுக்கு ஒரு எண்ட் இல்லையா ‘பிக் பாஸ்’?

Image
தன்னைத் திருத்திக் கொள்கிறேன் என்று சொல்லியும் கூட மறுபடியும் மும்தாஜிடம் சண்டை போடுவதால் நித்யா மீது மற்ற போட்டியாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கி 5 நாட்கள் ஆனாலும், பெரிய சுவாரசியம் இல்லாமல் நகர்ந்து வருகிறது. எங்கு சண்டையை ஆரம்பிப்பது எனத் தெரியாமல், ஏற்கெனவே இருக்கும் பாலாஜி - நித்யா சண்டையைக் கொண்டு ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது ‘பிக் பாஸ்’ கிரியேட்டிவ் டீம். இந்த சண்டை, தற்போது மும்தாஜ் - நித்யா இடையிலான சண்டையாக உருப் பெற்றுள்ளது.   சமையல் செய்வதில் மும்தாஜ் - நித்யா இடையே பிரச்சினை ஏற்பட, நித்யா ரொம்பவே பிடிவாதமாக நடந்து கொண்டார். அதை எல்லோரும் அவருக்குப் புரியவைக்க, இனிமேல் அப்படி நடந்துகொள்ள மாட்டேன் என வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அந்த வாக்குறுதியையும் மீறி மறுபடியும் பழைய மாதிரியே நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளார் நித்யா. இன்று வெளியான புரமோ வீடியோவில், “மும்தாஜ், ஏதோ கூப்பிட்டீங்களே...” என்று நித்யா கேட்க, “முதல்ல சமையலுக்கு முன்னுரிமை கொடுங்க” என்கிறார் மும்தாஜ். “நான் இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கும்போது கூப்பிட்டிருக்